சிறப்பு SI பதவி உயர்வுக்கு 10 ஆண்டுகள் பணி அனுபவம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!!

0
சிறப்பு SI பதவி உயர்வுக்கு 10 ஆண்டுகள் பணி அனுபவம்
சிறப்பு SI பதவி உயர்வுக்கு 10 ஆண்டுகள் பணி அனுபவம்
சிறப்பு SI பதவி உயர்வுக்கு 10 ஆண்டுகள் பணி அனுபவம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!!

தமிழக காவல்துறையில் சிறப்பு எஸ்.ஐ ஆக பதவி உயர்வு பெறுவதற்கு 10 ஆண்டுகள் தலைமைக் காவலராக பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு தொடர்பான மனுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

பதவி உயர்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த ராமசாமி என்பவர் தனக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனுவில், கடந்த 1979 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் இணைந்த ராமசாமி, காவல்துறையில் முதல் நிலை காவலராகவும், 7 ஆண்டுகள் தலைமைக் காவலராகவும் பணியாற்றி இருந்தார்.

JEE MAIN 2023 அமர்வு 1 தேர்வுக்கான நகரச் சீட்டு வெளியீடு – பதிவிறக்கம் செய்ய வழிமுறைகள் இதோ!!

Follow our Twitter Page for More Latest News Updates

இவர் தனது 25 ஆண்டு கால காவல் பணி அனுபவத்தை வைத்து சிறப்பு SI ஆக பதவி உயர்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அவருக்கு பதவி உயர்வு அளித்து உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், 10 ஆண்டுகள் வரை தலைமைக் காவலராக பணி புரிந்தவர்களுக்கு மட்டுமே சிறப்பு SI ஆக பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!