தமிழக அரசு அதிகாரிகள் கவனத்திற்கு – உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

0
தமிழக அரசு அதிகாரிகள் கவனத்திற்கு - உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
தமிழக அரசு அதிகாரிகள் கவனத்திற்கு - உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
தமிழக அரசு அதிகாரிகள் கவனத்திற்கு – உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

தமிழகத்தில் கல்வித்துறையில் உள்ள குரூப் ஏ, குரூப் பி அதிகாரிகளின் மொத்த சொத்துக்களை ஆராய வேண்டும் எனவும், வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை புதிய உத்தரவு ஒன்று வெளியாகி இருக்கிறது.

உயர்நீதிமன்றம் உத்தரவு:

தமிழக அரசு சார்பில் செயல்பட்டு வரும் துறைகளில் பல ஊழல்கள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. மேலும் லஞ்சம் வழங்கி பல அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்படுவதாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் டேவிட் லியோ உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தன்னை நிர்வாக காரணங்களுக்காக வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்து அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அதனை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

TNPSC Group 4 VAO தேர்விற்கு விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறார். அதில் மனுதாரர் தரப்பில் கவுன்சிலிங் வாயிலாக நடக்கும் இடமாற்றம், பதவி உயர்வுகளில் ஊழல் நடக்கிறது. அதில் 10 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் லஞ்சம் கொடுக்கப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஒவ்வொரு ஆண்டும் 15 ஆயிரம் புகார்கள் வருகின்றன. அந்த புகார்களுக்கு துறை சார்பில் தமிழக அரசின் வழிகாட்டுதல்களின்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆனால் அந்த புகார்களுக்கு சரியான விளக்கம் எதுவும் கொடுக்கப்படாமல் இருக்கிறது.

Exams Daily Mobile App Download

லஞ்ச ஒழிப்பு துறையின் இந்த நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது. இதனால் ஊழல் தடுப்புச் சட்டத்தின் நோக்கம் மீறப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை. துறைத் தலைவருக்கு அனுப்பப்படும் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இனிமேல் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தனிப் படையை அமைக்க வேண்டும். தேவைப்பட்டால் கல்வித்துறை, பிற அரசு துறைகளில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கையாள கூடுதல் போலீசாரை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வழங்க அரசு, டி.ஜி.பி.யிடம் கோரிக்கை வைக்கலாம். கல்வித்துறையில் உள்ள ‘குரூப் ஏ, குரூப் பி’ அதிகாரிகளின் சொத்துகளை சரிபார்ப்பது அவசியம் ஆகும். வருவாய்க்கு அதிமாக சொத்து சேர்த்திருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் கல்வித்துறையில் மாநிலம் முழுதும் நடைபெறும் ஊழல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த பயனுள்ளதாக இருக்கும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!