தமிழகத்தில் சத்துணவு வழங்க அங்கன்வாடி மையங்கள் திறப்பு – நீதிமன்றத்தில் தகவல்!
தமிழகத்தில் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குவதற்காக அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்க இருப்பதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
அங்கன்வாடிகள் திறப்பு:
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு தினசரி சத்துணவு வழங்கப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக சமைக்கப்படாத தானியங்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளிகளில் கட்டாயம் சமைக்கப்பட்ட உணவு வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அரசு மருத்துவமனையில் 73 காலிப்பணியிடங்களுக்கான நேர்காணல் – அலைமோதிய கூட்டம்!
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் சமைக்கப்படாத உணவுகள் வழங்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் மனுதாரர் சமைக்கப்பட்ட ஊட்டச்சத்துள்ள உணவு பொருட்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை நீதிமன்றம் செப்டம்பர் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
TN Job “FB Group” Join Now
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி, குழந்தைகளுக்கான சத்துணவு வழங்கும் திட்டம் குறித்த கேள்விக்கு பதில் மனு அனுப்பியுள்ளது. அதில், மாணவர்களுக்கு சத்துணவு வழங்க அங்கன்வாடி மையங்களை திறக்க உள்ளதாக தமிழக அரசு மனுவில் தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட சத்துணவு வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.