சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு – இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 192 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த வாரம் முதல் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வு நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்க விலை:
நாடு முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா பெருந்தொற்றின் காரணத்தால் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டது. தொழில்கள் முடங்கியதால் முதலீட்டாளர்கள் கடும் பொருளாதார சரிவை சந்தித்தனர். இந்த நேரத்தில் ஏராளமானோர் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இது நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை விளக்கம்!
தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலையால் சாமானியர்கள் நகை வாங்க முடியாமல் தவித்தனர். தற்போது வரை கொரோனா பரவல் தாக்கம் முழுவதும் கட்டுக்குள் வராமல் இருப்பதால் நாட்டில் வர்த்தகத்தின் முழு இயல்பு நிலை திரும்பவில்லை. அதனால் தங்கம் விலையும் மக்கள் எதிர்பார்த்த அளவு குறையவில்லை. அவ்வப்போது தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை கண்டு வருகிறது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.24 அதிகரித்து ஒரு சவரன் ரூ.35,136-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
IBPS 7855 Clerk காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க அக்.27 கடைசி தேதி !
அதனை தொடர்ந்து இன்று ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றை விட அதிகரித்துள்ளது. அதாவது ரூ.192 உயர்ந்து ஒரு சவரன் 35,288-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.4,411-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 60 காசுகள் அதிகரித்து ரூ.65.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.