சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40 உயர்வு – இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. பண்டிகை நெருங்குவதால் அதிகரிக்கும் தங்கத்தின் விலையால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
தங்க நகை வாங்குவது என்பது மக்களின் முதலீடாக உள்ளது. பெரும்பாலும் மக்கள் தங்கம் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வருடம் முதல் பரவி வரும் கொரோனா பாதிப்பால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் விற்பனை இன்றி தொழில் நிறுவனங்கள் தொடர் சரிவை சந்தித்து வந்தது. இதனால் கடந்த வருடம் முதல் பரவ தொடங்கிய கொரோனா வைரசால் விதிக்கபட்ட ஊரடங்கால் தங்கம் விலை உச்சத்தை தொட்டது. இதனால் சாமானியர்கள் நகை வாங்க முடியாமல் திணறினர். அதன் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் தொடங்கிய பிறகு தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை கண்டது.
தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கும் தமிழக அரசு – ‘இல்லம் தேடி கல்வி திட்டம்’!
விழாக்காலங்கள் மற்றும் சுபமுகூர்த்த தினங்களில் தங்கம் விலை வழக்கத்தை விட சற்று அதிகரித்து இருக்கும். அந்த வகையில் கடந்த நாட்களில் வந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தங்கம் விலை அதிகரித்து. தற்போது மற்ற நாடுகளில் தங்கம் என்பது ஒரு வகையான முதலீடு, ஆனால் இந்தியாவில் தங்க நகைகள் அணிவது ஒரு வழக்கமாக உள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலையால் திருமணத்திற்கு நகை வாங்க வேண்டும் என்று எண்ணி கொண்டிருப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
OLA நிறுவனத்தில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு – புதிய அறிமுகம்!
இந்த நிலையில் சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35,896க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,487க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை சில்லறை வர்த்தகத்தில் ரூ.69.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் தங்கத்தின் விலை உயர்வால் நகை பிரியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.