தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கும் தமிழக அரசு – ‘இல்லம் தேடி கல்வி திட்டம்’!
தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியை போக்குவதற்கு ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் இணைத்து செயலாற்ற தன்னார்வலர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
தொடக்கப் பள்ளி:
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்துள்ளது. அதனால் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து கடந்த செப் – 1 ம் தேதி 9 முதல் 12 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அடுத்த கட்ட நடவடிக்கையாக தொடக்கப் பள்ளிகள் திறப்பது குறித்து பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டு வந்தன. பின்னர் நவ – 1 ம் தேதி தொடக்கப்பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனை பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வருகின்றனர். ஆனாலும் மாணவர்களின் கற்றல் காரணமாக உடனடியாக பள்ளிகள் திறக்க வேண்டும் என்று அரசு உறுதி அளித்துள்ளது. மாணவர்கள் தற்போது சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிக்கு வருகைதர இருக்கிறார்கள்.அவர்கள் மன ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
OLA நிறுவனத்தில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு – புதிய அறிமுகம்!
அவர்களுக்கு கற்றலை ஞயாபகப்படுத்தும் விதமாக சென்னையில் இளைஞர்கள் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள். அதேபோல் மாணவர்கள் நலன் கருதி இல்லம் தேடி கல்வி திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் மாணவர்களின் இல்லம் தேடி கல்வி அளிக்கும். ஏனென்றால் மாணவர்கள் எழுதுவது, படிப்பது என்று அனைத்திலும் பின்தங்கியுள்ளனர். பள்ளிகள் திறந்த பின்னரும் இத்திட்டம் செயல்படும். அதாவது மாலை நேரங்களில் மாணவர்களின் வீடு தேடி பாடம் கற்பிக்கப்படும். இந்நிலையில் பள்ளிக்கல்வி ஆணையர் முதலில் மாணவர்களை உளவியல் ரீதியாக சரி செய்துவிட்டு பின்னர் அவர்களுக்கு பாடம் நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் வேலை பார்ப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தடை? நவ.24ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
பள்ளிகளின் நேரம் போக மாலை 5 மணி முதல் 7 மணி வரை தன்னார்வலர்கள் வழியே மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவ்வாறு பயிற்சி அளிக்க நியமிக்கப்படுபவர் குறைந்தது வாரத்துக்கு 6 மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. விருப்பமுள்ள தன்னார்வலர்கள் illamthedikalvi.tnschool.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விபரங்களை பதிவிடலாம் என திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விருப்பமுள்ளவர்களுக்கு தமிழ் கட்டாயம் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் முற்றிலும் மாணவர்களின் நலன் கருதியே தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.