சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.36,448 விற்பனை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் மாறிக்கொண்டே வருகிறது. இதனை தொடர்ந்து இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.328 உயர்ந்துள்ளது. மேலும் சவரன் ரூ.36,448க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை உயர்வு
பொதுமக்கள் தங்களது முதலீடுகளை பாதுகாப்பான முறையில் கவனம் செலுத்த தொடங்கின. அதனால் பங்கு சந்தை, அமெரிக்க டாலர், ரியல் எஸ்டேட் என இருந்த முதலீடுகள் தற்போது தங்கத்தின் மீது அதிக முதலீடுகளை செலுத்தினர். அத்துடன் நிதி நெருக்கடி ஏற்படும் போது நகைகளை அடமானம் வைத்து கடன்களை சுலபமாக பெற்று கொள்ளலாம். தங்கத்தின் மதிப்பு கூடும் போது கடன் தொகையின் அளவும் கூடுகிறது. இதனால் பொதுமக்கள் அதிக அளவு தங்கத்தை வாங்க விரும்பினர்.
மேலும் வெளிநாடுகளில் உள்ள முதலீட்டாளர்கள் தங்கத்தையே பெருமளவில் வாங்கி வருகின்றன. இதனால் தங்கத்தின் தேவையும் அதிகரித்துள்ளது. அத்துடன் தங்கத்தின் விலையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தற்போது சென்னையில் இன்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.328 என அதிரடியாக உயர்ந்துள்ளது. அத்துடன் சவரனுக்கு ரூ.36,448 என்று விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் ஒரு கிராமுக்கு ரூ.41 என உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து சென்னையில் இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,556-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சம்பளம் உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
அதே போல் நேற்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 64.60 என்று விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராமுக்கு 50 பைசா உயர்ந்து ஒரு கிராம் ரூ.65.10 என விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.65100 என விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளதால் நகை பிரியர்கள் மிகுந்த கவலையுடன் உள்ளனர். இதனால் தங்கம் மற்றும் வெள்ளி நகை கடைகளில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்த அளவே காணப்படுகிறது.