சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு? மாநகராட்சி ஆணையர் விளக்கம்!

2
சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு? மாநகராட்சி ஆணையர் விளக்கம்!
சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு? மாநகராட்சி ஆணையர் விளக்கம்!
சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு? மாநகராட்சி ஆணையர் விளக்கம்!

தமிழக தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் தேர்தலுக்கு பின்னர் முழு ஊரடங்கு விதிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்களுக்கு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

முழு ஊரடங்கு விளக்கம்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து பிற அனைத்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. இதன் விளைவாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அரசின் வரிவசூல் குறைந்ததால் வருவாய் இழப்பு ஏற்பட்டு நிதிப்பற்றாக்குறை நிலவியது. இதனால் பல மாநில அரசுகள் அரசு ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்தன.

நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!

ஆனால் தமிழக அரசு அவ்வாறாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக சிக்கன நடவடிக்கைகளை எடுத்து அரசின் செலவினங்களை குறைத்தது. பின்னர் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனால் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படாமல் விதிகள் காற்றில் பறக்க விடப்பட்டன. இதன் விளைவாக மீண்டும் கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

TN Job “FB  Group” Join Now

கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நாள்தோறும் 2000க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் தலைநகர் சென்னையில் நோய்த்தொற்று உயர்ந்து கொண்டே வருகிறது. தேர்தல் முடிந்த உடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏப்ரல் 3, 5ம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!

தற்போது இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், சென்னையில் தேர்தலுக்கு பின்னர் ஊரடங்கில் பல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். அந்த கசப்பான அனுபவத்தை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. பொதுமக்களின் வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டு இருக்கிறிர்கள் உங்களுடைய இந்த அறிவிப்பானது.
    நீங்க தன்னிச்சையாக எடுத்த முடிவு இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இது முழுக்க அரசியல் சம்பந்தப்பட்டதாக,கட்சியின் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.

    அரசுக்கு கீழ் கட்டுப்பட்டு நடக்கும் நீங்கள். மோடியின் கட்டுக்குள் அடங்கி கொண்டிருக்கிறீர்கள் என்பது, இந்த கருத்தின் அடிப்படையில் தெளிவாக தெரிகிறது. தேர்தலுக்குப் பின்னர் ஊரடங்கு அறிவிக்கும் நீங்கள் .தேர்தலுக்கு முன்னாடியே ஊரடங்கு அறிவித்தால் என்ன தவறாகும்.
    கொரோனா என்ற நோய்தொற்று இவ்வளவு நாட்கள் இல்லாமல்,இப்போ 2அலைவரிசையாக திடீர்னு எப்படி முளைத்திருக்கும்‌. இதற்கு பின்னால் என்ன சதி நடக்கிறது. மக்களுடைய வாழ்க்கையில் ஏன்?இவ்வித கேள்விக்குறியாக மாற்றம் செய்கிறீர்கள்.
    இது முழுக்க அப்பட்டமான பொய்.

    முதல்ல கொரோனா எந்த அடிப்படையில் தொற்றாக மாறுகிறது. என்று உங்களால் அறிவிக்க முடியுமா?.உங்களால் அறிவிக்க முடியுமா.

  2. தேர்தலுக்காக கொரோனா இல்லாதமாதிறி கணக்குகாட்னாங்க
    இப்ப தேர்தல் முடிய போகுது
    மறுபடியும் லாக் டவுன்
    யாரும் கேள்விகள் கேட்க முடியாது
    கூட்டம் கூட முடியாது
    நல்ல அரசாங்கம்
    நீங்க நல்லா இருங்க
    மக்கள் நிலை? ????????????????

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!