சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ. 600 வரை சரிந்த தங்கத்தின் விலையால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மறுநாளே திடீரென தங்கம் விலை ஏற்றம் கண்டது.
தங்கம் விலை:
இந்தியாவில் கடந்த வருடம் நிலவிய கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட பங்கு சந்தை சரிவு, தொழில் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக தங்கம் விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் நகைகள் வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மற்ற நாடுகளில் தங்கம் என்பது ஒரு வகையான முதலீடு மட்டுமே இந்தியாவில் தங்கம் மற்றும் அதனால் ஆன அணிகலன்கள் என்பது ஒரு வித கலாசாரமாக உள்ளது. அதனால் இந்திய மக்கள் நகைகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எப்போதும் பண்டிகை, திருவிழா மற்றும் சுப முகூர்த்த தினங்களில் தான் தங்கம் விலை உயரும்.
Exams Daily Mobile App Download
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எப்போதும் தங்கம் விலை உயர்த்து தான் உள்ளது. அதனை தொடர்ந்து ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் காரணத்தாலும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. இதனால் சாமானிய மக்களும், நகை பிரியர்களும் நகை வாங்குவதில் பொருளாதார ரீதியான சிக்கலை சந்தித்து வருகின்றனர். இந்த நேரத்தில் கடந்த இரு தினங்களாக தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதற்கு மத்தியில் தங்கம் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியது. அதனால் ஜூலை 1ஆம் தேதி ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 856 ரூபாய் உயர்ந்தது.
தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி – விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ!
அதனை தொடர்ந்து இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,480 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,810-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.64 க்கு விற்பனையாகி வருகிறது. வரும் நாட்களில் இன்னும் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.