தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி – விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் வழங்க இருப்பதாக தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
விண்ணப்பிக்கும் முறை:
தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர், முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் மொத்தம் 13,331ல் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய இருப்பதாக அரசு ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த ஆசிரியர் நியமனத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கும், ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்கள், ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
ஆனால் அரசின் வழிமுறைகளை சரியாக பின்பற்றாமல் ஆசிரியர் நியமனம் வழங்கப்படுவதாக புகார் வந்ததை அடுத்து தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அரசின் வழிமுறைகளை கடைபிடித்து நியமனம் வழங்கப்பட வேண்டும் என அரசு அதற்கான வழிமுறைகளை வெளியிட்டது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
Diploma முடித்தவர்களுக்கு ரூ.9,000/- ஊக்கத்தொகையுடன் வேலை – முழு விவரங்களுடன் !
அதில் 2022-2023ஆம் கல்வியாண்டில் 01.06.2022 அன்றைய நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை / பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்படவுள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை 04.07.2022 முதல் 06.07.2022 மாலை 5 மணி வரை மாவட்டக் கல்வி அலுவலரிடம் சென்று நேரடியாக விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு.வி.ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.