மத்திய அரசின் புதிய ஓய்வூதியத்தில் மாற்றங்கள் – ரூ.2 லட்சம் வரைக்கும் பென்சன்!
தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் வாயிலாக ஓய்வூதியதாரர்களுக்கு பலவிதமான பலன்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. மாதத்திற்கு ரூ.2 லட்சம் வரைக்கும் பெறும் படியான சிறப்பான ஒரு திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
தேசிய ஓய்வூதியத் திட்டம்:
தன்னார்வ பங்களிப்பை மக்களுக்கு வழங்கி வரும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் வாயிலாக ஓய்வூதியதாரர்கள் பலவிதமான பலன்களை பெறலாம். அதாவது, அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்த தேசிய பென்ஷன் திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்கிறோமோ அதற்கு தகுந்தார்போல் பென்ஷன் பெறமுடியும். 18 வயது முதல் 65 வயது வரை உள்ள அனைத்து இந்திய குடிமகனும் இந்த திட்டத்தின் மூலமாக பயன் பெறலாம். கடந்த 2004 ஆம் ஆண்டில் அரசு ஊழியர்கள் மட்டுமே தேசிய பென்ஷன் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
பின்னர் 2009ஆம் ஆண்டிற்கு பிறகு தான் அனைத்து பொதுமக்களும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் வாயிலாக ஓய்வூதியம் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. அதாவது, தேசிய பென்ஷன் திட்டத்தின் மூலமாக 8 சதவீதம் முதல் 10 சதவீதம் வரைக்கும் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வருமான வரி சட்டத்தின் மூலமாக ஓய்வூதியதாரர்களுக்கு வரிச் சலுகையும் வழங்கப்படுகிறது. அதாவது, இந்த திட்டத்தின் மூலமாக மாதந்தோறும் 2 லட்ச ரூபாய் வரைக்கும் பென்ஷன் வாங்க முடியும்.
தமிழகத்தில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா பரிசோதனைகள் – அமைச்சர் அறிவிப்பு!
20 வயதிலேயே மாதந்தோறும் 5000 ரூபாய் என்கிற கணக்கில் டெபாசிட் செய்ய தொடங்கிவிட்டாலே 40 ஆண்டுகளில் ரூ.1.91 கோடி ரூபாய் பெற்றுக்கொள்ளலாம். அதாவது, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்கள் ஓய்வூதியதாரர் உயிரோடு இருக்கும் வரைக்கும் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. எனவே, தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து அனைத்து பலன்களையும் பெற விரும்புபவர்கள் உடனடியாக இணையும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.