வாகன ஓட்டிகள் கவனத்திற்கு இன்று முதல் போக்குவரத்து மாற்றம் – காவல்துறை அறிவிப்பு!
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் சென்னையில் முக்கிய பகுதியில் போக்குவரத்து பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
போக்குவரத்து பாதை மாற்றம்:
தமிழக தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த மெட்ரோ ரயிலில் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
தற்போது அதற்கான பணிகளும் சென்னையில் நடைபெற்று வருகிறது. இத்தகைய பணிகள் காரணமாக சென்னை மாம்பலம் பிரதான சாலை வழியாக செல்ல கூடிய வாகனங்களுக்கு மாற்று பாதைகள் சோதனை அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சோதனை முயற்சி வெற்றியடைந்ததை அடுத்து இன்று (ஜன.09) முதல் 2024 ஏப்ரல் 7ம் தேதி வரை போக்குவரத்து பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில் கட்டுமான பணிகள் காரணமாக மாம்பல பிரதான சாலை முதல் ஹபிபுல்லா சாலை வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. இந்த சாலைகள் வழியாக செல்லும் பாதைகளுக்கு மாற்று வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.