ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் வெல்பவரா… புதிய டிடிஎஸ் வரி முறை – நிதியைமைச்சரின் அதிரடி அறிவிப்பு!!
2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு, வரி மாற்றம் ஆகியவை இடம்பெற்றுள்ளது. தற்போது ஆன்லைன் விளையாட்டிற்கான டிடிஎஸ் வரி விகிதத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
டிடிஎஸ் வரி:
நாட்டின் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், வரி முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி தற்போது பழைய வருமான வரி முறையைப் பின்பற்றுபவர்களுக்கு தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, ரூ.3 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.
கரையை கடந்தது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – தமிழகத்தில் தொடரும் கனமழை!
இதே போல், புதிய வருமான வரி முறையைப் பின்பற்றுவர்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக இருந்த நிலையில், தற்போது ஆண்டு வருமானம் ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இணைய விளையாட்டில் தற்போது ரூ.10000-க்கு கீழ் பணம் வென்றால் அதற்கு டிடிஎஸ் வரி செலுத்த தேவையில்லை. ஆனால் தற்போது இந்த வரி முறையிலும் நிதியமைச்சர் மாற்றங்களை அறிவித்துள்ளார்.
அதாவது இனி இணைய விளையாட்டில் ரூ.10000க்கு கீழ் பணம் வென்றாலும் 30% டிடிஎஸ் வரி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி வசூல் முறையானது வருகிற ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.