கரையை கடந்தது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – தமிழகத்தில் தொடரும் கனமழை!
வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையின் மட்டக்களப்பு – திரிகோணமலைக்கு இடையே இன்று கரையை கடந்தது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்த பிறகும் ஓரிரு இடங்களில் அவ்வப்போது இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது திருகோணமலைக்கு 455 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது.
சுமார் 150 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Pinterest நிறுவனம் – அதிர்ச்சியில் ஊழியர்கள்!!
இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை – திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென் கிழக்கே சுமார் 115 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென் கிழக்கே சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த நிலையில் மெல்ல மெல்ல நகர்ந்து கரையை கடந்தது.
பிறகு இன்று அதிகாலை இலங்கையின் மட்டக்களப்பு – திருகோணமலைக்கு இடையே 3.30 மணியில் இருந்து 4.30 மணிக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.