அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ளும் சந்திரகலா – கோதைக்கு தெரியவருமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
தமிழின் நண்பன் சித்தர் போல வேடமிட்டு வாக்கு கூறி தான் சரஸ்வதியை கிச்சனில் சமைக்க ஒப்புக்கொள்ள வைத்தனர் மற்றும் தாலி கோர்க்கும் நிகழ்ச்சி வைக்க அனுமதித்தார். இந்நிலையில், அனைத்து உண்மைகளையும் அறிந்துகொள்ளும் சந்திரகலா தெரிந்துகொண்டு கோதையிடம் கூறுவாரா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
தமிழும் சரஸ்வதியும்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தமிழும் சரஸ்வதியும் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. படிக்காத சரஸ்வதியை எம்.பி.ஏ படித்தவர் என பொய் சொல்லி குடும்பத்தினர் அனைவரையும் நம்ப வைத்து தான் தமிழ் சரஸ்வதியை திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு சரஸ்வதி படிக்கவில்லை என்கிற உண்மை தமிழின் அம்மாவான கோதைக்கு தெரிய வருகிறது. தற்போது வரைக்கும் சரஸ்வதியை கோதையால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீட்டு கிச்சனுக்கு கூட செல்ல கூடாது என கூறிவிடுகிறார். இதனால் வீட்டில் வசு தான் சமைத்து வருகிறார்.
Exams Daily Mobile App Download
தமிழும் சரஸ்வதியும் தொடரின் வில்லியான சந்திரகலாவிடம் எப்படியாவது கிச்சனுக்கு போய் சமைத்து காட்டுகிறேன் என கூறி சபதம் போடுகிறார். எப்படியாவது இந்த சவாலில் வென்றே தீர வேண்டும் என சரஸ்வதி நினைக்கிறார். தமிழின் உயிருக்கு ஆபத்து என கோதையிடம் குடும்ப ஜோதிடர் பொய் சொல்லும்படியாக செய்கிறார்கள். தமிழின் நண்பன் சித்தர் போல வேடமிட்டு தமிழின் உயிருக்கு ஆபத்து வராமல் தடுக்க சரஸ்வதிக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி வைக்க வேண்டும் எனவும், சரஸ்வதியின் கையால் சமைத்த உணவை சாமிக்கு படையல் போட வேண்டும் என கூறுகிறார்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோர் கவனத்திற்கு – மேல் முறையீடு மனு தாக்கல்!
உடனே கோதை தமிழின் உயிரை காப்பாற்ற சரஸ்வதியை கிச்சனில் சமைக்க ஒப்புக்கொள்கிறார். சரஸ்வதியின் குடும்பத்தினர்கள் அனைவரையும் தாலி கோர்க்கும் நிகழ்ச்சிக்கு வர சொல்கிறார். பின்பு, நடந்த அனைத்தையும் சந்திரகலா அறிந்துகொள்கிறார். இந்த உண்மைகளை கோதைக்கு சந்திரகலா கூறுவாரா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த உண்மையை கோதை தெரிந்துகொண்டால் சரஸ்வதியை வீட்டைவிட்டு துரத்தவே வாய்ப்பிருக்கிறது.