தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோர் கவனத்திற்கு – மேல் முறையீடு மனு தாக்கல்!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோர் கவனத்திற்கு - மேல் முறையீடு மனு தாக்கல்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோர் கவனத்திற்கு - மேல் முறையீடு மனு தாக்கல்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோர் கவனத்திற்கு – மேல் முறையீடு மனு தாக்கல்!

மதுரை மாவட்டத்தில் நகைக்கடன் தள்ளுபடி பெயர் பட்டியலில் இடம் பெறாதோர், மதுரை மண்டல இணைப்பதிவாளர் ஆகியோருக்கு எழுத்துப்பூர்வமாக தகுந்த ஆதாரங்களுடன் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யலாம் என்று கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

நகைக்கடன்:

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் அளவிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தார். இந்த நிலையில் இவர் ஆட்சிக்கு வந்தவுடன் நிலவிய பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் நிபந்தனைகள் கொண்டு வர அரசு திட்டமிட்டது. இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களில் 37 வகையான விவரங்கள் சேகரிக்கப்பட்டு நகைக்கடன் தகுதி பெறுவோர், தகுதியற்றோர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

Exams Daily Mobile App Download

இதில் ஏராளமானோர் தகுதி பெற்றோர் பட்டியலில் இருப்பதாக புகார்கள் எழுந்தது. அதனால் அரசு எவ்வித நிபந்தைகளும் இன்றி அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நகை அடகு வைத்தவர்கள் வலியுறுத்தி வந்தனர். தேர்தலின் போது வாக்குறுதி அளித்தபடி நகைக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் நகைக்கடன் தள்ளுபடி பெயர் பட்டியலில் இல்லாதோர் மனு தாக்கல் செய்யலாம் என்று மதுரை மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

தனியார் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – உடனே விரையுங்கள்…!

மதுரை மாவட்டத்தில் பொது நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதி வாய்ந்தோர் பெயர் பட்டியல் madurai.nic.in என்ற இணையதளத்தில் கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்டது. பட்டியலில் இடம்பெறாதவர், அதற்குரிய முறையீட்டினை ஒரு மாத காலத்துக்குள் மதுரை சரக துணைப்பதிவாளர், உசிலம்பட்டி சரக துணைப்பதிவாளர் அல்லது மதுரை மண்டல இணைப்பதிவாளர் ஆகியோருக்கு எழுத்துப்பூர்வமாக உரிய ஆதாரங்களுடன் மேல்முறையீடு செய்யலாம் என்று இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார். மேல்முறையீடு செய்ய நாளை (மே 7) கடைசி நாளாகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!