இரவு ஊரடங்கு ரத்து, பொதுப்போக்குவரத்திற்கான கட்டுப்பாடுகள் நீக்கம் – மாநில அரசு!
கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு இரவு ஊரடங்கு, பொதுப் போக்குவரத்திற்கான கட்டுப்பாடுகளை நீக்குவதாக மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும் ஹோட்டல்கள் திறந்திருக்கும் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை பரவலால் தினசரி 4 லட்சம் பேர் வரை பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர். மேலும் உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே வந்தது. இதனையடுத்து பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை விதிக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்த மத்திய அரசு அதனை தேவைக்கேற்ப மாநிலங்களுக்கு விநியோயகம் செய்தது. முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி என விதிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.
SBI Card வேலைவாய்ப்பு 2021 – பட்டம் பெற்றவர்களுக்கான ஜாக்பாட் வாய்ப்பு!!
இதன் விளைவாக ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது குறையத் தொடங்கி உள்ளது. எனவே மாநில அரசுகளும் ஊரடங்கை தளர்த்தி வருகின்றன. அந்த வகையில் சண்டிகர் அரசு இரவு நேர ஊரடங்கை ரத்து செய்துள்ளது. மேலும் 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே பேருந்து பொதுப் போக்குவரத்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது அந்த கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டு உள்ளன. அதுமட்டுமின்றி காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் உணவகங்கள் மற்றும் பார்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த 2 ஆண்டுகளில் எலக்ட்ரிக் கார் அறிமுகம் – ஓலா நிறுவனத்தின் புதிய திட்டம்
சண்டிகரில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 62,031 ஆக உள்ளது. மருத்துவ அறிக்கையின் படி, 43 பேர் தற்போது கொரோனா தொற்றினால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 61,177 ஆக அதிகரித்து உள்ளது.