மே 15 வரை பள்ளி, கல்லூரிகள் மூடல் – மாநில அரசு உத்தரவு!!
சண்டிகர் மாநிலத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா நோய்த்தொற்றால் மே மாதம் 15 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி வகுப்புகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மூடல்:
இந்தியா முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் நோய் தாக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர். தவிர மருத்துவமனைகளில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக கொரோனா நோயளிகள் இறக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் தடுப்பு நடவடிக்கைகளாக மாநிலங்கள் தோறும் பல கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.
TN Job “FB Group” Join Now
சண்டிகர் மாநிலத்தில் பெருகி வரும் கொரோனா தொற்று காரணமாக வார இறுதி ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. தவிர பள்ளிகளுக்கும் மே 1 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள், பயிற்சி வகுப்புகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மே மாதம் 15 ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என சண்டிகர் மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு 1.33 கோடி பேர் முன்பதிவு – முதல் நாள் பதிவு முடிவு!!
இது குறித்து சண்டிகர் மாநில நிர்வாகம் தெரிவிக்கையில், ‘சண்டிகர் மாநிலத்தில் வார இறுதி ஊரடங்கு சனிக்கிழமை காலை 5 மணி முதல் திங்கள் கிழமை காலை 5 மணி வரை நடைமுறையில் இருக்கும். ஊரடங்கு உத்தரவின் போது அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், நூலகங்கள் ஆகியவை மே 15 வரை மூடப்படும்’ என கூறப்பட்டுள்ளது.