தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு:
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது. நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர் மற்றும் தென்காசியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மேலும் மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் இல்லை என்பதை வானிலை ஆய்வு கூறியுள்ளது.
இன்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், ஈரோடு, தர்மபுரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. திருப்பத்தூர், தி.மலை, வேலூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது.மேலும்,மேல் பவானியில் 7 செ.மீ., திருப்பூர் மாவட்டம் ஓமலூரில் தலா 6 செ.மீ. பரளியாறு, பந்தலூரில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி, திருநெல்வேலி, குமரி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.