தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
தமிழகத்தில் உள்ள ஒரு 6 மாவட்டத்தில் இலேசான மற்றும் மிதமான மழை பெய்ய கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. இதனால் மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழக வானிலை ஆய்வு மையம் சார்பில் கூறப்பட்டு உள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக-வட இலங்கை கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும் பொது மக்களும் பாதுகாப்புக்காக இருக்குமாறு கூறியுள்ளனர்.
ExamsDaily Mobile App Download
இதனால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்த சில இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மழையால் சில இடங்களில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது. அதனால் மக்களும் கோடை வெப்பத்தில் இருந்து மாறி குளிர் பிரதேசத்தில் இருப்பது போல உணர்வதாக தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் இந்நிறுவன தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
இந்நிலையில் தற்போது அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, கோவை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.