தமிழகத்தில் இந்நிறுவன தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

0
தமிழகத்தில் இந்நிறுவன தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு!
தமிழகத்தில் இந்நிறுவன தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு!
தமிழகத்தில் இந்நிறுவன தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

தமிழகத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது என நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தா.ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தொழிலாளர்களுக்கு அடிப்படை ஊதியத்துடன் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை 1.4.2022 முதல் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

கொரோனா தொற்று நோயால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பொதுத் துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்வினை, அரசு ஆணை எண் 323, நாள்: 17.10.2019 ஆம் ஆண்டின்படி நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 1-1-2022 முதல் 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்க கடந்த வருடம் டிசம்பர் மாதம் 28ம் தேதி அன்று ஆணையிட்டார்.

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – மாஸ்க் அணிய அறிவுறுத்தல்!

இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கான 31 சதவீதம் அகவிலைப்படியினை கூட்டுறவு நியாய விலைக்கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. மேலும் அண்மையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% ஆக இருந்த அகவிலைப்படியை 34% ஆக உயர்த்த ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் பீடி நிறுவனங்கள் போன்ற பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1-4-2022 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ExamsDaily Mobile App Download

அந்த அரசாணையில் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பிரதி மாதம் ரூ.4,698-ம், உணவு நிறுவன தொழிலாளர்களுக்கு ரூ.6,708-ம், பொது மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.7,678-ம், சினிமா தியேட்டர் தொழிலாளர்களுக்கு ரூ.7,207-ம், மருத்துவமனை மற்றும் நர்சிங் ஹோம் பணியாளர்களுக்கு ரூ.7,816-ம், பாதுகாவல் பணியாளர்களுக்கு ரூ.6,554-ம், சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் தொழிலாளர்களுக்கு ரூ.4,626-ம், பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு 1000 பீடிகள் சுற்றுவதற்கு ரூ.128.01-ம், உள் பணியாளர்களுக்கு ரூ.6,812-ம் அகவிலைப்படியாக உயர்த்தி வழங்கப்பட வேண்டும். 1.4.2022 முதல் அடிப்படை ஊதியம் மற்றும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி சேர்த்து அனைத்து நிறுவனங்களும் அதன் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் அப்படி வழங்கப்படாத நிறுவனங்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை தொடரப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!