தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
தமிழகத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
வானிலை நிலவரம்
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. மே மாதத்துடன் கோடைக்காலம் முடிவடைந்த நிலையிலும், வெளியின் தாக்கமானது சற்றும் குறையவில்லை. அதிலும் கடந்த 4 நாட்களாக கடுமையான வெயில் காணப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் உள் மாவட்டங்களை பொருத்தளவு வெளியில் உஷ்ணம் சற்று அதிகமாகவே காணப்பட்டு வருகிறது.
தமிழக பள்ளிகளில் ஜூன் 14 முதல் புத்தகங்கள் விநியோகம்? ஏற்பாடுகள் தீவிரம்!
இந்த நிலையில் இன்று (ஜூன் 12) தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அதாவது இன்று சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ஈரோடு, சேலம், தர்மபுரி, புதுவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை காணப்படும் என தகவல்கள் கிடைத்துள்ளது.