தமிழக பள்ளிகளில் ஜூன் 14 முதல் புத்தகங்கள் விநியோகம்? ஏற்பாடுகள் தீவிரம்!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாட புத்தகங்களை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 3 கோடியே 70 லட்சம் பாடப் புத்தகங்களை அச்சிட்டு தயார் நிலையில் உள்ளது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பாடப்புத்தகங்கள் விநியோகம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வகுப்புகளும், தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்றது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மதிப்பீடு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மற்ற வகுப்பு மாணவர்களும் தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 15 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் – மாநில கல்வி வாரியம் அறிவிப்பு!!
தற்போது ஜூன் 1 முதல் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளது. வரும் ஜூன் 14ஆம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மூன்றாம் வாரம் முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. , அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி பணிகள் கழகம் 3 கோடியே 70 லட்சம் பாடப் புத்தகங்களை அச்சிட்டு தயார் நிலையில் வைத்துள்ளது.
TN Job “FB Group” Join Now
தேவையான பாட புத்தகங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிகளில் தற்போது கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பாடப்புத்தகங்களை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஜூன் 14 முதல் புத்தகங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அதிகாரபூர்வமாக மாணவர்களுக்கு புத்தகங்கள் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறையால் அறிவுறுத்தப்படும் என தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.