தமிழகத்தில் அரியர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டுமே சான்றிதழ் – உயர்நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா பேரலை காரணமாக கல்லூரி மாணவர்களின் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில் அரியர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியர் தேர்வு
கடந்த 2020ம் ஆண்டு நாடு முழுவதும் உருவான கொரோனா பேரலை தாக்கத்தினால் அனைத்து வகையான சேவைகளும் முடக்கப்பட்டது. மேலும் பொது மக்கள் அனைவரும் தொற்று நோய் குறித்த அச்சத்தில் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை, வேலை, தொழில் ஆகியவற்றுடன் மாணவர்களின் எதிர்கால கல்வி என்பதும் கேள்விக்குறியானது. இதனை சரி செய்யும் விதத்தில் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் கல்வி முறையை தேர்ந்தெடுத்தன.
தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தடை? நவ.24ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
தமிழகத்திலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டிருந்த காலத்தில் தேர்வுகளில் கலந்து கொள்ளாமலேயே அம்மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளின் மூலம் கல்லூரிகளில் பயின்று பல ஆண்டுகளாக தேர்வில் தேர்ச்சி அடையாமல் அரியர் வைத்திருக்கும் மாணவர்களும் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – ஒரு வாரத்தில் அரசாணை வெளியீடு!
தமிழக அரசு வெளியிட்ட இந்த அரசாணைக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. அந்த வகையில் தேர்வில்லாமல் தேர்ச்சி பெறுவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்ளிட்ட சில கல்வி நிபுணர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘தமிழகத்தில் அரியர் தேர்வு எழுதாத எந்தவொரு மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கக் கூடாது’ என்று உத்தரவிட்டுள்ளனர்.