தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – ஒரு வாரத்தில் அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் உள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, இன்னும் ஒரு வாரத்தில் அரசாணை வெளியிடப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் பேட்டியளித்துள்ளார்.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் மோசடி குறித்த பல புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது. மேலும் மோசடியில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் உள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு எப்போது அமலுக்கு வரும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
நெருங்கும் தீபாவளி பண்டிகை, அதிகரிக்கும் மெசேஜ் மோசடிகள் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கூட்டுறவுத் துறை அறிவிப்புகள், நகைக்கடன் தள்ளுபடி மற்றும் முறைகேடு, காலிப்பணியிடங்கள் நிரப்புதல் குறித்து முதல்வர் ஸ்டாலின் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, செயலாளர் நசிமுதீன் மற்றும் கூட்டுறவுத் துறையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழக மின் வாரியத்தில் தொழில் பழகுநர் பயிற்சி, ரூ.7709 உதவித்தொகை – அக்.29 நேர்காணல்!
இந்த ஆலோசனைக்கு பிறகு நகைக்கடன் தள்ளுபடி குறித்து அதாவது தீபாவளிக்கு முன்பு முக்கிய அறிவிப்பை முதல்வர் முக ஸ்டாலின் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுகையில், கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசாணை வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த நகைக்கடன் தள்ளுபடி அமலுக்கு வந்தால் சுமார் 11 லட்சம் பேர் பயனடைவார்கள் என அவர் கூறினார்.