நெருங்கும் தீபாவளி பண்டிகை, அதிகரிக்கும் மெசேஜ் மோசடிகள் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் நவீன முறையில் திருட்டு நடந்து வருகிறது. அதை தடுக்க பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
மோசடி:
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அனைத்தும் டிஜிட்டல் மாயமாகியுள்ளது. காலத்திற்கேற்ப திருட்டுகளும் நவீன மாயமாகியுள்ளது. அதனை கட்டுப்படுத்த அவ்வப்போது காவலர்கள் பல்வேறு விழிப்புணர்வு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இருந்தும் ஆங்காங்கே பல்வேறு மோசடிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. பண்டிகை காலங்களில் வாழ்த்து சொல்வது போன்ற லிங்க் அனுப்பப்பட்டு அதன் கிளிக் செய்பவர்கள் விவரங்கள் முதல் பணம் வரை திருடப்பட்டு வருகிறது.
தமிழக மின் வாரியத்தில் தொழில் பழகுநர் பயிற்சி, ரூ.7709 உதவித்தொகை – அக்.29 நேர்காணல்!
தற்போது தொடர்ந்து பண்டிகைகள் வரவிருப்பதால் இது போன்ற லிங்க் வலம் வருவது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நான்கு வகையான மெசேஜ் மூலம் மோசடி செய்யப்பட்டு வருகிறது. அதில் ATM டிடக்சன் மெசேஜ்-ம் ஒன்று. உங்கள் வங்கியில் இருந்து இவ்வளவு தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது என வரும் மெசேஜை கிளிக் செய்யும் பட்சத்தில் விவரங்கள் மற்றும் வங்கி விவரங்கள் திருடப்படுகிறது.
தமிழகத்தில் நாளை (அக்.22) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதேபோல் வேலைவாய்ப்புகள் குறித்து மெசேஜ் அனுப்பப்படும். நிறுவனத்தின் விவரங்கள் ஏதும் வழங்காமல் லிங்க் மட்டும் இணைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அது மோசடிகாரர்களின் சதி வேலையாக இருக்கும். பம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளதாகவும் மெசேஜ் அனுப்பப்படும். அந்த மெசேஜில் உள்ள லிங்க் மூலம் மூன்றாம் தளத்திற்கு திருப்பி விட்டு அங்கிருந்து விவரங்கள் திருடப்படும். அதேபோல் அதிகாரபூர்வ அறிவிப்பு போன்று மெசேஜ் அனுப்பப்பட்டு லிங்க் கிளிக் செய்யும் பட்சத்தில் ஹேக்கர்கள் மூலம் விவரங்கள் திருடப்படும் என கூறப்பட்டுள்ளது.