தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்கள் – கல்வி அலுவலர் சுற்றறிக்கை!!
12ம் வகுப்பு மாணவர்களுக்கு இனிவரும் நாட்களில் பள்ளி செயல்படும் நாட்கள் குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தேர்வுகள்:
தமிழகத்தில் 12ம் வகுப்பைத் தவிர மற்ற அனைத்து வகுப்புகளும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அரசு அறிவித்தது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வழக்கம் போல் செய்முறை & எழுத்துத்தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்படட்டது. அதன்படி, தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
TNPSC AAO தேர்வுகள் இன்று தொடக்கம் – சேலத்தில் 6686 பேர் பங்கேற்பு!!
தேர்வுகள் ஒத்திவைப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் காரணத்தால் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நெருங்குவதால் பள்ளிகள் செயல்பட்டு வந்தது. தற்போது கொரோனா பரவல் பாதிப்பு மிக தீவிரமாக உள்ளதால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை தள்ளி வைப்பதற்காக கோரிக்கைகள் பலதரப்பில் இருந்தும் எழுப்பப்பட்டுள்ளது.
பள்ளி நாட்கள்:
நேற்று முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் தொடங்கப்பட்டு விட்டது. ஏப்ரல் 23ம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடக்க இருக்கிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களும் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், இனி பள்ளிகள் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே செயல்பட வேண்டும். செய்முறைத்தேர்வு இல்லாத மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு தயாராகும் வகையில் விடுமுறை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்