TNPSC AAO தேர்வுகள் இன்று தொடக்கம் – சேலத்தில் 6686 பேர் பங்கேற்பு!!
TNPSC ஆணையத்தின் வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடக்கிறது. இதற்காக நேற்று சேலத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
எழுத்துத்தேர்வு:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர், வேளாண்மை அலுவலர் (விரிவாக்கம்), தோட்டக்கலை உதவி இயக்குனர், தோட்டக்கலை அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கான எழுத்துத்தேர்வு இன்று (17.4.2021), நாளை (18.4.2021) மற்றும் ஏப்ரல் 19ம் தேதியும் நடக்கிறது. இதற்காக மாவட்டம் தோறும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடக்க இருக்கிறது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
சேலம் மாவட்டம்:
சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வுக்காக மொத்தம் 11 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 6,689 தேர்வர்கள் தேர்வை எழுத உள்ளனர். இதற்காக அங்கு 6 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வை கண்காணிக்க வீடியோ பதிவு செய்ய 21 நபர்கள் நியமிக்கப்ட்டுள்ளனர். வினாத்தாள், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாளை சேகரித்தல் போன்ற பணிகளுக்காக தேர்வு அலுவலர்கள் நியமிக்கப்ட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பு:
தேர்வர்கள் அனைவரும் தேர்வு மையத்திற்கு தேர்வு அனுமதி சீட்டுடன், ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வர வேண்டும். தேர்வர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, தகுந்த சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டத்தில் அறிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்