நாடு முழுவதும் ஊரடங்கு பிப்ரவரி 28 வரை நீட்டிப்பு – மத்திய அரசு உத்தரவு!!
நாடு முழுவதும் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. இதில் ஏற்கனவே உள்ள தளர்வுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஒவ்வொரு முறை ஊரடங்கு நீட்டிக்கப்படும் பொழுதும் புதிய தளர்வுகள் வழங்கப்படுகிறது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு ஜனவரி 31ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், நாடு முழுவதும் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு மேலும் ஒரு மாதம் (பிப்ரவரி 28 வரை) நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
3 முதல் 9, 11 ஆம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வுகளின் அட்டவணை வெளியீடு!!
அதுமட்டுமின்றி புதிய தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் இந்தியாவில் குறைந்து கொண்டே வருகிறது. இங்கிலாந்தில் இருந்து பரவி வரும் உருமாறிய கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
பிப்ரவரி 1 முதல் 9, 11 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
மேலும் புதிய தளர்வுகள் மற்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகள் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே மட்டுமே அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்