பிப்ரவரி 1 முதல் 9, 11 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
பிப்ரவரி 1 முதல் குஜராத் மாநிலத்தில் 9 மற்றும் 11 வகுப்புகளுக்கான பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை அம்மாநில கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சூடாசாமா உறுதிப்படுத்தி உள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
குஜராத் மாநிலத்தில் கடந்த வருடம் மார்ச் 15ம் தேதி மூடப்பட்ட பள்ளிகள், 10,12 வகுப்புகளுக்கு ஜனவரி 11 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் மே மாதத்தில் வரவிருக்கும் சிபிஎஸ்இ வாரிய தேர்வுகள் மற்றும் மாநில வாரிய தேர்வுகளுக்கு தயாராக உள்ளனர். மேலும் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு மற்றும் முதுகலை மாணவர்களுக்கு ஏற்கனவே திறக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று எண்ணிக்கைகளின் வீழ்ச்சியைக் கருத்தில் கொண்டு கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு – மீண்டும் மூடப்படும் பள்ளிகள்??
தற்போது பிப்ரவரி 1 முதல் குஜராத் மாநில அரசு 9 மற்றும் 11 வகுப்புகளுக்கான பள்ளிகளை மீண்டும் திறக்கவுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பள்ளிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அம்மாநில கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சூடாசாமா 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான அரசு பள்ளிகளை மீண்டும் திறப்பதை உறுதிப்படுத்தினார். வரவிருக்கும் இறுதித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 11ம் வகுப்பிற்கு 40% பாடத்திட்டம் குறைப்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நுழையும் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை குஜராத் மாநில அரசு வெளியிட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்