’20 ஆண்டுகளில் முதல்முறை’ – மத்திய அமைச்சர் அதிரடி கைது! நாசிக் போலீசார் நடவடிக்கை!
மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவை அவதூறாக பேசிய புகாரின் அடிப்படையில் நாசிக் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று மத்திய அமைச்சர் நாராயண் ராணேவை அதிரடியாக கைது செய்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சர் கைது :
இந்தியாவில் மத்திய அமைச்சர்கள் அனைவரும் தான் சொந்த மாநில மக்களிடம் ஆசி பெறுவதற்காக மக்கள் ஆசி யாத்திரையை கட்சித் தலைமை அறிவுரையின் கீழ் மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் மத்திய அமைச்சர் நாராயண் ரானே, நேற்று மக்கள் ஆசி யாத்திரையில் கலந்து கொண்டு உரையாடினார். அப்போது நாடு சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என்ற விவரம் கூட மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு தெரியவில்லை என்று கூறினார்.
ஆகஸ்ட் 25ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தனது உதவியாளரிடம் அதனை கேட்டு தெரிந்து கொண்டார். நான் மட்டும் அங்கிருந்தால் அவரை கன்னத்தில் அறைந்திருப்பேன் என்று கூறினார். இதனை தொடர்ந்து மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் அமைச்சர் நாராயண் ரானேவை கண்டித்து சிவசேனா தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவசேனா மற்றும் பாஜக தொண்டர்கள் மும்பையில் மோதிக் கொண்டனர்.
TN Job “FB Group” Join Now
அமைச்சர் நாராயண் ரானேவுக்கு எதிராக சிவசேனா நிர்வாகிகள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். பிறகு புனே மற்றும் நாசிக்கில் உள்ள காவல்நிலையங்களில் அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர் நாராயண் ரானே ஜாமீன் கோரி கோரினார். ஆனால் தற்போது மகாராஷ்டிரா முதல்வரை அவதூறாக பேசியதற்காக மத்திய அமைச்சர் நாராயண் ரானே மகாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளில் கைது செய்யப்பட்டிருக்கும் முதல் மத்திய அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.