பிப்ரவரி 1ம் தேதி வெளியாக உள்ள குட் நியூஸ் – அரசு ஊழியர்கள் ஹேப்பி!
மத்திய அரசு ஊழியர்களுக்கான பல்வேறு பணப்பலன்கள் குறித்த தகவல்களும் பிப்ரவரி 1ம் தேதி வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹேப்பி நியூஸ்:
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஃபிட்மென்ட் ஃபேக்டர் காரணிக்கான ஒப்புதல் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வருகிறது. மேலும் 2024 ஜனவரி முதல் ஜூன் மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த தகவல்களும் வெளியாக உள்ளது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சகம் ஆனது பிப்ரவரி 1ம் தேதி அன்று 2024 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த உள்ளது.
அதன்படி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி அன்று பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் தாக்கலில் பல்வேறு அறிவிப்புகளும் வெளியாகும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஃபிட்மென்ட் ஃபேக்டர் ஒப்புதல் மற்றும் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் 2024 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலுக்கு முன்பாகவே மத்திய அரசு ஊழியர்களை மகிழ்ச்சி படுத்தும் வகையில் இந்த இரண்டிற்கும் ஆன அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அகவிலைப்படி உயரும் பட்சத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
Follow our Instagram for more Latest Updates
வங்கியில் வேலை வேண்டுமா? தேர்வில் வெற்றி பெற அருமையான வாய்ப்பு – மிஸ் பண்ணிடாதீங்க!