ஒரு கிலோ அரிசி ரூ.29/- க்கு விற்பனை – மத்திய அரசு அதிரடி!
மத்திய அரசு ஒரு கிலோ அரிசி ரூ.29 க்கு விற்பனை செய்யும் திட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
அரிசி:
கடந்த ஒரு ஆண்டு காலமாக அரசியின் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் மத்திய அரசு மக்களுக்கு பயன்பெறும் வகையில் ரூ. 29க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்யும் திட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளது. இந்த அரிசிக்கு பாரத் அரிசி என பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சந்தைகளில் 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி – மார்ச் 19 ல் தொடக்கம் …!
ஏற்கனவே பாரத் ஆட்டா’ என்ற பெயரில் ரூ. 27.50-க்கு ஒரு கிலோ கோதுமை மாவும், ‘பாரத் பருப்பு’ என்ற பெயரில் ரூ. 60-க்கு ஒரு கிலோ சென்னாவையும் (வெள்ளை கொண்டைக் கடலை) மத்திய அரசு சில்லறை சந்தையில் விற்பனை செய்து வருவைத்து குறிப்பிடத்தக்கது. வேன்கள் மூலம் விற்பனை செய்யும் வகையில் 100 நடமாடும் விற்பனை நிலையங்களை பியூஷ் கோயல் கொடியசைத்து செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.