UPI ஐடி குறித்த எச்சரிக்கை.. டிசம்பர் 31 கடைசி நாள் – NPCI புதிய வழிகாட்டுதல் வெளியீடு!
இந்தியாவில் ஓராண்டுக்கு மேலாக பயன்படுத்தாத UPI ஐடிகளை டிச.31ஆம் தேதிக்கு பின் செயலிழக்க செய்யும் வழிகாட்டுதல்களை என்பிசிஐ வெளியிட்டுள்ளது.
NPCI வெளியீடு
இந்தியாவில் மக்கள் பலர் அதிகமாக UPI பரிவர்த்தனைகளை செய்து வருகின்றனர். அதற்கு ஜிபே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட ஆன்லைன் பேமன்ட் சேவைகள் பயன்படுகின்றன. இந்நிலையில் இந்த சேவைகள் யுனிபைட் பேமன்ட்ஸ் இன்டர்பேஸ் (யு.பி.ஐ) கீழ் செயல்படுகிறது. ஆன்லைன் பரிவர்த்தனை செய்ய வங்கி கணக்குடன் தொடர்புடைய யுபிஐ மூலமாக டிஜிட்டல் முறையில் பணத்தை பரிமாற்றம் செய்யலாம். இந்நிலையில் ஓராண்டுக்கு மேலாக பரிவர்த்தனை செய்யாத யுபிஐகள் டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பின் செயலிழந்து விடும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
விதிமுறைகளை மீறிய BAJAJ FINANCE நிறுவனம் – ரிசர்வ் வங்கி அதிரடி!! வாடிக்கையாளர்கள் பாதிப்பு!!
இது குறித்த புதிய வழிகாட்டுதல்களை என்பிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து வங்கிகளும், ஜி பே, போன்பே போன்ற மூன்றாம் தரப்பு பயன்பாடுகளும் ஒரு வருடத்திற்கு மேலாக எந்த பரிவர்தனையும் செய்யாமல் இருந்தால், அந்த யுபிஐ ஐடிகள் டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பின் தடை செய்யப்படும். இதன் மூலம் தவறான நபரின் கணக்கில் பணம் செலுத்துவது தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.