மத்திய அரசின் திட்டத்தின் மூலம் ரூ.6,000 எளிமையாக பெறலாம் – தவற விடாதீங்க! முழு விவரங்கள் உள்ளே!
நாட்டின் விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் பலன் பெற தகுதியானவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிசான் திட்டம்:
நாட்டின் விவசாயிகளுக்கு உதவும் வகையிலும், அவர்களின் விவசாயத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ளும் வகையிலும், மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ.6000 அளித்து வருகிறது. ஆனால் மத்திய அரசின் இந்த திட்டத்தில் பலரும் முறைகேடாக பணம் பெற்று வருவது கண்டறியப்பட்டது. இதனால் இந்த திட்டத்தில் பயனடையும் மக்களுக்கான தகுதிகளை மத்திய அரசு வகுத்துள்ளது. அரசின், இந்த வரைமுறைகளுக்குள் இல்லாதவர்கள் ஏற்கனவே பயனடைந்திருந்தாலும், அந்த தொகையை உடனடியாக அரசுக்கு திரும்ப செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்னும் 7 ஆண்டுகளில் உலகில் 500 மில்லியன் மக்களுக்கு ஏற்பட போகும் ஆபத்து – WHO அறிக்கை!!
Exams Daily Mobile App Download
அரசின் உத்தரவின் படி,
- கணவன், மனைவி இருவரில் ஒருவர் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் பலன் பெற முடியும். அதை மீறும் பட்சத்தில் அவர்கள் தகுதி அற்றவர்களாக திட்டத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்.
- குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் அரசுக்கு வரி செலுத்தி வருபவர்களாக இருந்தால், அவர்களும் தகுதி அற்றவர்களாக கருதப்படுவர்.
- மற்றவர்களில் நிலத்தில் விவசாய வேலை செய்பவர்கள் மற்றும் விவசாய நிலத்தை வேறு பணிகளுக்கு பயன்படுத்துபவர்கள் இந்த திட்டத்தின் பலன் பெற முடியாது.
- விவசாய நிலம் தங்களது பெயரில் பதிவு செய்யப்படாதவர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அல்லது அமைச்சர் மற்றும் மந்திரி பதவிகளில் இருந்த விவசாயிகளும் இந்த திட்டத்தில் பலன் அடைய முடியாது.
- அரசின் மற்ற தொழில் முறை துறைகளில் பதிவு செய்து பணியாற்றுபவர்களும் இந்த திட்டத்தின் பலனை பெற முடியாது.