தமிழக பள்ளி மாணவர்களுக்கு 10 முட்டை & சத்துணவு பொருட்கள் – மத்திய அரசு உத்தரவு!!
மத்திய அரசு உத்தரவின் படி, தமிழக பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் முட்டையும் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
மதிய உணவு திட்டம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படவில்லை. வழக்கமாக பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் மூலமாக உணவு வழங்கப்படும். ஆனால் கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் அந்த உணவுக்கான பொருள்களை உலர் பொருளாக மாற்றி வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவின் படி, தமிழக பள்ளி குழந்தைகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் முட்டையும் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் குழந்தைகளுக்கு அரிசி பருப்புடன் தலா 10 முட்டைகள் மற்றும் சத்துணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஜூன் 15 வரை நீட்டிப்பு அறிவிப்பு – மின்கட்டணம் செலுத்த அவகாசம்!
இந்த திட்டத்தின் மூலமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் தகுதியுள்ள 11.8 கோடி மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதி உதவிக்காக மத்திய அரசால் 1200 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு சரியான முறையில் இந்த பொருள்கள் சென்றடைவதை அந்த மாவட்ட ஆட்சியர்களும் உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.