புலம் பெயர்ந்த தொழிலாளிகளுக்கு குடும்ப அட்டை – மத்திய அரசு விளக்கம்!
நாடு முழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளிகளுக்கு எவ்வாறாக குடும்ப அட்டை மூலமாக உணவு விநியோகம் நடைபெறுகிறது என்ற உச்ச நீதிமன்றத்தின் கேள்விக்கு மத்திய அரசு பதில் மனு அளித்துள்ளது.
கொரோனா பாதிப்பு
நாட்டில் கடந்த வருட மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்த்தொற்று பரவ ஆரம்பித்தது. இதனால் பணி நிமித்தமாக ஒரு மாநிலத்தில் இருந்து வேறொரு மாநிலத்திற்கு சென்றவர்கள் பலரும் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பினர். இதன் காரணமாக அவர்களுக்கு அரசின் நியாய விலை கடைகளில் இருந்து எவ்வாறாக பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது என்றும் அதன் நிலை குறித்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. கூடுதலாக, விசாரணையில், அட்டை இல்லாமல் அவர்களுக்கு எவ்வாறாக உணவு விநியோகிக்கப்படுகிறது? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்தியர்கள் ஹஜ் பயணம் செல்ல தடை – கொரோனா பரவல் எதிரொலி!
இது தொடர்பாக தற்போது மத்திய அரசின் சார்பாக வழக்கறிஞர் ஐஸ்வர்யா பாட்டியா பதில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில் புலம் பெயர்ந்துள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் மத்திய அரசின் “ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு” என்ற திட்டத்தின் கீழ் உணவு பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன என்றும், இதன் மூலமாக நாட்டில் உள்ள 80 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயன் அடைய முடியும் என்று தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
கூடுதலாக, இந்த திட்டத்தின் மூலமாக நாட்டில் உள்ள எந்த ஒரு நியாய விலை கடைகளிலும் மக்கள் உணவு பொருட்களை பெற்று கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக கடந்த மே 20 மற்றும் 25 ஆம் தேதிகளில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் மத்திய அரசின் சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ‘பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம்’ என்ற திட்டத்தின் மூலமாகவும் மக்களுக்கு வரும் நவம்பர் மாதம் முதல் 5 கிலோ உணவு பொருட்களை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.