4 கோடி தலித் மாணவர்களுக்கு ரூ.59,000 கோடி கல்வி உதவித்தொகை – மத்திய அரசு அறிவிப்பு!!
தலித் மாணவர்கள் 10ம் வகுப்பிற்கு பிறகும் கல்வியை தொடர்வதை ஊக்கப்படுத்தும் விதமாக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தை மத்திய அரசு மேம்படுத்தியுள்ளது.
மத்திய அரசு:
மத்திய அரசு தலித் மாணவர்கள் தங்களின் படிப்பை பத்தாம் வகுப்போடு நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
2013ம் ஆண்டு TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க வேண்டும் – ஆசிரியர்கள் கோரிக்கை!!
இந்த திட்டத்திற்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.59,000 கோடியை கல்வி உதவித்தொகையாக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதில் 60% பணத்தை மத்திய அரசு நிதியிலிருந்தும், மீதமுள்ள பணத்தை மாநில அரசு நிதியிலிருந்தும் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய மந்திரி தவார்சந்த் கெலாட் :
இது தொடர்பாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி தவார்சந்த் கெலாட் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில், முந்தைய காலங்களில் இருந்த திட்டத்தை பின்பற்றி கடந்த 2 ஆண்டுகளாக ஆண்டுக்கு ரூ.1,100 கோடி மட்டுமே போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகைக்கு வழங்கப்பட்டது. இதனால் மாநில அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டது.
சரியான நேரத்திற்குள் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க முடியவில்லை. இதனால் தலித் மாணவர்களின் பள்ளி இடைநிற்றல் விகிதம் அதிகரித்தது. ஆனால் மோடி அரசு தற்போது இதை மாற்றியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படும்.
பிரிட்டன் விமானங்கள் இந்தியா வர ஜன.7 வரை தடை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!!
இந்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவினால் மாணவர்களின் கல்வி தரம் உயரும். இந்த முடிவிற்கு எந்த மாநிலமும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த திட்டத்தின் மூலம் 2014-2015 ம் ஆண்டில் 17% மாணவர்கள் பயனடைந்த நிலையில் தற்போது 23% ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது”என்று கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
என்னுடைய மகள் NIFT முன்றாம் ஆண்டு படித்து வருகிறார் கு.பிரியதர்ஷினி.SC வகுப்பை சேர்ந்த இரண்டு ஆண்டுகளாக உயர் கல்வி உதவி தொகை கொடுக்க படவில்லை இதற்க்கு மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை