2013ம் ஆண்டு TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க வேண்டும் – ஆசிரியர்கள் கோரிக்கை!!
2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற தங்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியர்கள் மனு கொடுத்தனர்.
ஆசிரியர் தகுதித்தேர்வு:
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு தேவையான ஆசிரியர்களை தமிழக அரசு ஆசிரியர் தகுதித்தேர்வின் மூலம் மட்டுமே தேர்வு செய்யும். ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும். இதற்காக ஆசிரியர் பணிக்கு படித்தவர்கள் விண்ணப்பித்து தேர்வு எழுதுவார்கள். தேர்வின் முடிவுகள் வெளியானதும் அரசு தகுதியானவர்களை ஆசிரியர் பணிக்கு நியமிக்கும்.
2013ம் ஆண்டு தேர்ச்சி :
கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற விழுப்புரம் ஆசிரியர்கள் தங்களுக்கு இன்னும் பணி ஆணை வழங்கவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.
பிரிட்டன் விமானங்கள் இந்தியா வர ஜன.7 வரை தடை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!!
ஆசிரியர்களின் மனு:
ஆசிரியர்களின் மனுவில், “தமிழ்நாட்டில் கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று 7 ஆண்டுகளாக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு உடனடியாக பனி வழங்க வேண்டும் எனவும், அரசு பள்ளிகளில் ஆசிரியராக சேருவதற்கு அதிகபட்ச வயது 40 என்பதை அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்ற என்சிடிஇ அறிவிப்பின் படி புதிய ஆணை வழங்க வேண்டும்” என்றும் கூறப்பட்டிருந்தது.
மருத்துவ உளவியலில் எம்.ஃபில் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் – மருத்துவ கல்வி இயக்குனரகம்!!
புதிய வேலை வாய்ப்பு:
மாவட்ட ஆட்சியரிடம், “அரசு பள்ளிகளில் புதிய வேலை வாய்ப்பு உருவாக்கி பனி நியமனம் வழங்க வேண்டும். 2013ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற எங்களுக்கு வயது மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்