கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் செல்போன் இணைப்பு துண்டிப்பு – அரசு எச்சரிக்கை!
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி:
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் தற்போது உருமாற்றம் அடைந்த டெல்டா வேரியண்ட் வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. சில நாடுகளில் கொரோனா மூன்றாம் அலை மற்றும் நான்காம் அலை பாதிப்பு கூட ஏற்பட்டுள்ளது. என்ன தான் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினாலும் கொரோனாவை தடுக்க தடுப்பூசி செலுத்துவது தான் ஒரே ஆயுதமாக உள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல் – நவம்பர் 1 வரைவு பட்டியல் வெளியீடு!
இதனால் பல்வேறு நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில நாடுகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் இலவச சலுகைகளை வழங்கி வருகிறது. சில நாடுகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும் உள்ளிட்ட உத்தரவுகளை அமல்படுத்தி வருகிறது.
இந்த வரிசையில் பாகிஸ்தானில் கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்பு ஏற்படுவோரில் 70 சதவிகிதம் பேருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த நாட்டில் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லை. இதனால் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும், அவ்வாறு செலுத்தாதவர்கள் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதுமட்டுமில்லாமல் அலுவலகம் வர அவர்கள் அனுமதி இல்லை, சம்பளம் வழங்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் உணவகங்கள், ஷாப்பிங் மால்களில் நுழைய தடை விதிக்கப்படும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இதனால் அந்த நாட்டு மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். சில தடுப்பூசி மையங்களில் கிலோமீட்டர் கணக்கில் மக்கள் அணிவகுத்து நின்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 200 மில்லியன். இவர்களில் வெறும் 6.7 மில்லியன் மக்கள் மட்டுமே இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.