முப்படை தலைமை தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து, 13 பேர் உயிரிழப்பு – கள நிலவரம்!

0
முப்படை தலைமை தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து, 13 பேர் உயிரிழப்பு - கள நிலவரம்!
முப்படை தலைமை தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து, 13 பேர் உயிரிழப்பு - கள நிலவரம்!
முப்படை தலைமை தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து, 13 பேர் உயிரிழப்பு – கள நிலவரம்!

நீலகிரியில் உள்ள காட்டுப்பகுதியில் நாட்டின் ராணுவ ஹெலிகாப்டர் பெரும் விபத்துக்கு உள்ளானதில் இதுவரை 13 பேர் உடல்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இன்னும் ஒருவரை பற்றிய விவரம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து:

வெலிங்டன் ராணுவ கல்லூரியின் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக கோவையில் இருந்து இரண்டு ஹெலிகாப்டர்கள் கிளம்பியுள்ளது. வெலிங்டன் பயிற்சி கல்லூரியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் குன்னூரில் ஒரு ஹெலிகாப்டர் விபத்திற்கு உள்ளாகியுள்ளது. விபத்து ஏற்பட்ட ஹெலிகாப்டரில் நாட்டில் முப்படை ராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட மொத்தம் 14 பேர் பயணம் செய்துள்ளனர். ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் ராணுவத்தினர் மற்றும் காவல் துறையினர் விரைந்து சென்றனர். தொடர்ந்து விரைவாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

LPG சிலிண்டருக்கான மானியத் தொகை வந்ததா? இல்லையா? உறுதி செய்ய ஒரு ஈஸியான வழி!

ஆரம்பத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையிலும்,3 பேர் படு காயங்களுடனும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பயங்கர காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பபட்டுள்ளதாகவும் முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய நிலவரப்படி விபத்தில் 7 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் புதிதாக 6 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 13 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றது.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

மேலும், விபத்தில் சிக்கிய ராணுவ அதிகாரி பிபின் ராவத் நிலை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆனால், பிபின் ராவத் அவர்களின் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குன்னூரில் நடந்துள்ள இந்த பயங்கர விபத்து குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நீலகிரி ஆட்சியருடன் தொலைபேசியில் விசாரித்துள்ளார். மொத்தம் பயணம் செய்த 14 பேரில் 13 பேரின் நிலை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள ஒருவரை குறித்த நிலவரம் இன்னும் தெரியவில்லை. ஆனால் விரைவில் அறிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!