CBSE +2 பொதுத்தேர்வு குறித்து பிரதமர் மோடி – இன்று மாலை ஆலோசனை!!
கொரோனா பரவல் காரணமாக மாநிலங்கள் தோறும் ஒத்தி வைக்கப்பட்டுள்ள +2 பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து கல்வி உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று (ஜூன் 1) மாலை ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமர் ஆலோசனை:
நாடு முழுவதும் அதிகரித்து வந்த கொரோனா பரவல் காரணமாக 12 ஆம் வகுப்பு CBSE பொதுத்தேர்வை மத்திய அரசு ஒத்தி வைத்துள்ளது. இந்த பொதுத்தேர்வுகளை மீண்டுமாக நடத்துவது தொடர்பான எவ்வித முடிவுகளையும் மத்திய அரசு இதுவரை எடுக்கவில்லை. அதன் காரணமாகவும், கொரோனா பரவல் எதிரொலியாகவும் தேர்வுகளை ரத்து செய்யும்படிக்கு CBSE மாணவர்களின் பெற்றோர்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வேலையிழப்பு – கொரோனா எதிரொலி!!
வழக்கு விசாரணையின் போது, CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து இன்னும் சில நாட்களில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது. தொடர்ந்து கொரோனா காலத்தில் மாணவர்களின் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதால், கால அவகாசத்தை வழங்குமாறும் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. தொடர்ந்து 12 ஆம் வகுப்பு CBSE தேர்வுகளை நடத்துவது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று ஆலோசனை மேற்கொள்ள இருந்தார்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் இன்று (ஜூன் 1) பிற்பகல் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அறிவிக்கப்பட்ட படி இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் கலந்து கொள்ள முடியாததால், பிரதமர் மோடி CBSE தேர்வு நடத்துவது தொடர்பாக இன்று (ஜூன் 1) மாலை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமருடன், மாநில பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.