இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வேலையிழப்பு – கொரோனா எதிரொலி!!

0
இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வேலையிழப்பு - கொரோனா எதிரொலி!!
இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வேலையிழப்பு - கொரோனா எதிரொலி!!
இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வேலையிழப்பு – கொரோனா எதிரொலி!!

கொரோனா இரண்டாம் அலையினால் அறிவிக்கப்படுள்ள பொதுமுடக்கம் காரணமாக நாட்டின் வேலையிழப்புகள் ஒரு கோடிக்கும் அதிகமாக உள்ளதாக இந்திய பொருளாதார மத்திய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

வேலையிழப்புகள் அதிகரிப்பு:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் பரவல் அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வந்ததால் நோய் கட்டுபாட்டு நடவடிக்கையாக பல மாநிலங்களிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் காய்கறி, மளிகை பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனை – ஆணையர் எச்சரிக்கை!

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் இந்தியாவின் பொருளாதார நிலையை பாதித்துள்ள நிலையில், இது குறித்து இந்திய பொருளாதார மத்திய கண்காணிப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், இரண்டாவது அலையினால் நாட்டில் 97% குடும்பங்கள் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஊரடங்கினால் நாட்டில் ஏப்ரல் மாதம் மட்டும் வேலையின்மை விகிதம் 8% ஆக உள்ளது.

TN Job “FB  Group” Join Now

தற்போதைய நிலவரத்தின் படி, வேலையின்மை 12% ஆக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு இது 23.5% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. வேலைவாய்ப்புகள் மீண்டும் கிடைக்க ஒரு வருட கால ஆகலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேலையின்மை 3% முதல் 4% ஆக இருப்பது சாதாரண நிலையாகவே கருதப்படும். ஆனால், நாட்டின் தற்போதைய நிலை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று இந்திய பொருளாதார மத்திய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!