அரசு பள்ளிகளில் இனி CBSE பாடத்திட்டம் – புதுவை அரசு திடீர் அறிவிப்பு!
அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு CBSE பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட போவதாக கல்வி மற்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
CBSE பாடத்திட்டம்
புதுச்சேரியில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் குறித்து சட்ட பேரவையில் கலந்தோசிக்கப்பட்டது. அப்போது புதுச்சேரி மாநிலத்தின் கல்வி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சில அறிவிப்புகளை வழங்கியுள்ளார். அதாவது, புதுச்சேரி காவல்துறையில் காலியாகவுள்ள 1,044 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், காவல்துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவைத்தொகையில் முதல் தவணை ரூ.5.5 கோடி வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்லைட்டிங் முறைக்கு எதிர்ப்பு காட்டும் ஐடி நிறுவனங்கள் – ஆய்வு அறிக்கை வெளியீடு!
மேலும், ஊர்காவல் படையினருக்கும் சீருடை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் உள்ள 60 காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த பணி ஆணை அளிக்கப்பட்டுள்ளதாகவும், சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அறிவித்துள்ளார். மேலும், புதுச்சேரியில் நிலவும் போக்குவரத்து சிக்கலை குறைப்பதற்காக 37 சிக்னல்களை சரி செய்வதற்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமல்லாமல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாணவர்கள் ரூ.1 கட்டணத்தில் பயணிக்கும் சிறப்பு பேருந்துகளில் இலவசமாகவே பயணம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் கல்வி மற்றும் விளையாட்டின் தரத்தை உயர்த்துவதற்கான வேலைப்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்