மூன்லைட்டிங் முறைக்கு எதிர்ப்பு காட்டும் ஐடி நிறுவனங்கள் – ஆய்வு அறிக்கை வெளியீடு!
ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் மூன்லைட்டிங் முறையை கையாளும் போது, ஊழியர்களின் உற்பத்தி திறனை பாதிக்கிறது என்று கருதுவதால், ஐடி நிறுவனங்கள் இப்போது இது போன்ற செயல்களை கட்டுப்படுத்த தொடங்கியுள்ளன.
மூன்லைட்டிங் முறை:
ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் வேலைசெய்துகொண்டே இன்னொரு நிறுவனத்திலும் மாலை நேரம், இரவு நேரம் அல்லது வார இறுதி நாட்களில் வேலை செய்வதுதான் மூன்லைட்டிங் எனப்படுகிறது. இந்தியாவின் உயர்மட்ட தகவல் தொழில்நுட்ப சேவைகள், நிறுவனத்திடம் இருந்து முன் அனுமதி பெறாமல், அவர்களில் சிலர் வேறு வேலைகளை மேற்கொள்வதாக அறிக்கைகள் வெளியாகி வருகின்றன. இதனால் ஐடி நிறுவனங்கள் இது குறித்து ஊழியர்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழக சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு – முழு விவரம் இதோ!
ஐடி துறையில் மூன்லைட்டிங் முறை நீண்ட காலமாக உள்ளது, இருப்பினும், கோவிட் -19 தொற்றுநோய் காலத்திற்கு பிறகு அதிகரித்துள்ளது என்று ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கத்துடன் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், பலர் தங்கள் செலவுகளை ஈடுகட்டவும், ஆட்குறைப்புகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் இரண்டு நிறுவனங்களில் பணி புரிந்து வருகின்றனர், இதனால், ஊழியர்களின் உற்பத்தித்திறன் மற்றும் பணியின் மீதான ஆர்வம் குறைவதாக நிறுவனங்கள் கருதுவதால், ஐடி நிறுவனங்கள் இப்போது இதுபோன்ற செயல்பாடுகளை கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளன.
36,000-க்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்ட பிளாக்ஸ்டோன் குழுமத்தால் கட்டுப்படுத்தப்படும் எம்பாசிஸ், கூடுதல் வருமான ஆதாரங்களைக் கண்டறிய அதன் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கை சரி பார்க்கத் தொடங்கியுள்ளது. டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி என் கணபதி சுப்ரமணியமும், ஊழியர்கள் நெறிமுறையில் இருக்க வேண்டும் என்றும், மூன்லைட்டிங் முறை நீண்ட காலத்திற்கு உதவாது என்றும் என்றும் கூறினார். மேலும், குறுகிய கால ஆதாயங்களுக்காக இதுபோன்ற ஒன்றைச் செய்தால், நீண்டகாலத்திற்கான பலன்களை இழக்க நேரிடும் என்றும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்