தமிழகத்தில் கோயில் விழாக்களில் சாதி பாகுபாடு? உயர்நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!
தமிழகத்தில் உள்ள கோவில்களில் அனைத்து தரப்பு மக்களும் சாதி, நிற அடிப்படையில் பாகுபாடு இன்றி அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நீதிமன்றம் உத்தரவு:
மக்கள் பலர் நிம்மதியை தேடி கோவில்களுக்கு செல்கின்றனர். பலருக்கு ஏற்படும் கஷ்டங்களை கோவிலுக்கு சென்று கடவுளிடம் சொன்னால் அதனால் அவர்களுக்கு மனநிம்மதி ஏற்படுகிறது. அப்படிபட்ட புனிதமான தலமாக கோவில்கள் இருக்கின்றனர். கோவில்களில் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி அனைவரும் வரிசையில் காத்து நின்று தான் கடவுளை தரிசனம் செய்கின்றனர். ஆனால் தமிழகத்தில் ஒரு சில கோவில்களில் குறிப்பிட்ட சாதியினர் அனுமதிக்கப்படாமல் இருக்கின்றனர்.
அதனால் குறிப்பிட்ட சாதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. அந்த வகையில் கோவில்களில் அனைத்து மக்களையும் சாதி, நிற வேறுபாடு இல்லாமல் கடவுளை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவரும் கடவுளை வழிபட அனைத்து உரிமைகளும் உண்டு என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
ஆதார் சேவைகளை வழங்குவதற்கான புதிய மொபைல் ஆப் அறிமுகம் – முழு விவரங்களுடன்!
Exams Daily Mobile App Download
அது மட்டுமில்லாமல் கோயில் விழாக்களில் சாதி, நிற அடிப்படையில் பாகுபாடு பார்க்க கூடாது எனவும், பட்டியல், பழங்குடியினர் உட்பட அனைத்து சமூகத்தினரையும் இணைத்து விழா நடத்த உத்தரவிட்ட தனிநீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பாகுபாடு காட்டக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. இந்த உத்தரவானது அனைத்து தரப்பு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்