தமிழகத்தில் டெபாசிட் வசதியுடைய ATM களில் பணம் எடுக்க தடை!
சென்னை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் நூதன முறையில் திருட்டு நடைபெற்றதை தொடர்ந்து டெபாசிட் வசதியுடைய ஏடிஎம்-களில் பணம் எடுக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம் திருட்டு:
சென்னை ராமாபுரம், விருகம்பாக்கம், தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் மர்ம கும்பல் நூதன முறையில் திருடியுள்ளது. குறிப்பாக ராமாபுரம் வள்ளுவர் சாலையில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு கடந்த 17ஆம் தேதி இரண்டு மர்ம நபர்கள் சென்று 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியுள்ளனர்.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!
எஸ்.பி.ஐ.யின் பணம் டெபாசிட் செய்யும் எந்திரங்களை குறிவைத்து ஒரே பாணியில் பணம் திருடப்பட்டுள்ளது. வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம். கார்டு மூலம் பணத்தை எடுக்க பொத்தான்களை அழுத்தியுள்ளனர். பணம் வந்ததும் அதை எடுத்துக்கொள்கின்றனர். அதேசமயம், பணம் வெளிவரும் பெட்டியின் மூடியை மூடிக் கொள்ளாமல் பிடித்துக் கொள்கின்றனர். இதனால் பணத்தை எடுக்கவில்லை என கருதி இயந்திரம் கணக்கிலிருந்து பணத்தை கழித்துக் கொள்ளாது. இப்படியாக பலமுறை நூதன திருட்டை செய்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதே பாணியில் மீண்டும் மீண்டும் பணம் எடுத்து ரூ.15 லட்சம் வரை திருடப்பட்டுள்ளது. இதனால் ஏடிஎம்-களில் நூதன முறையில் பணம் திருட்டு போன காரணத்தால் டெபாசிட் வசதியுடைய ஏடிஎம்-களில் பணம் எடுக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தரமணி, வடபழனி, வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் டெபாசிட் ஏடிஎம்-களில் சென்சாரை மறைத்து வடமாநில கொள்ளை கும்பல் பணத்தை திருடியுள்ளது. தற்போது தெரிய வந்துள்ளது.