நீட் தேர்வு கருணை மதிப்பெண் குறித்த வழக்கு – உயர்நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு!
இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க கோரி தமிழகத்தைச் சேர்ந்த நபர் தேர்வு முகமைக்கும் மனு அனுப்பினார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
நீட் தேர்வு:
இந்தியாவில் 2022 – 2023 ம் கல்வி ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி நடைபெற்றது. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு பிறகு தேர்வின் முடிவுகள் கடந்த 8ம் தேதி வெளியானது. இந்த தேர்வில் தமிழகம் திண்டிவனத்தைச் சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் தவறான கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்காமல் இருந்துள்ளார். வழக்கமாக தவறான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.
Follow our Instagram for more Latest Updates
ஆனால் தேசிய தேர்வு முகமை தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்கவில்லை.இதனையடுத்து அந்த நபர் கருணை மதிப்பெண் வழங்க கோரி மத்திய அரசுக்கும், தேர்வு முகமைக்கும் மனு அளித்தார். உதயகுமார் 92 கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ளார். பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 93 மதிப்பெண்கள் கட் ஆப் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இவரின் மதிப்பெண் குறைவாக இருந்த நிலையில் கருணை மதிப்பெண் வேண்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்து சனிக்கிழமைகளிலும் இயங்கிய அலுவலகத்திற்கு நாளை ஒரு நாள் விடுமுறை – வெளியான அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இந்த மனுவை பரிசீலித்த தேசிய தேர்வு முகமை தவறான கேள்வியை தவிர்க்காமல் ஏதேனும் ஒரு விடை அளித்தால் மட்டுமே கருணை மதிப்பெண் வழங்க முடியும் என்று தெரிவித்தது. இதனை எதிர்த்து மாணவர் மனுவை மேல்முறையீடு செய்தார். தற்போது இந்த வழக்கு விசாரணையில் நீட் தேர்வில் தவறான கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்த மாணவருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவருக்கு கருணை மதிப்பெண்களாக 4 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.