வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தமிழக அரசிடம் தங்களது 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாணை வெளியீடு:
தமிழக அரசின் வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர் முதுநிலை, வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணை அடிப்படையில் விதி திருத்த ஆணையை வெளியிட வேண்டும். பட்டதாரி அல்லாத பணி அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை வெளியிட வேண்டும், போன்ற பத்து அம்ச கோரிக்கைகளை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ASRB மத்திய அரசு நிறுவனத்தில் மாதம் ரூ.56,100 /- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்நிலையில், இந்த கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கரூர் மாவட்டத்தில் காலவரையற்ற வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு பட்டதாரி அல்லாத அலுவலர்கள் பணியிறக்கத்தை ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக வருவாய்துறை அலுவலர்களின் 10 அம்ச கோரிக்கையில் ஒரு கோரிக்கை நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.