ஜூலை 5க்கு மேல் இரவு ஊரடங்கு உத்தரவு ரத்து? மாநில அரசு ஆலோசனை!
கர்நாடகா மாநிலத்தில் தற்போதுள்ள முழு ஊரடங்கு உத்தரவானது ஜூலை 5 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஊரடங்கு குறித்த புதிய வழிகாட்டுதல்கள் நெறிமுறைகள் இன்று (ஜூலை 2) வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முழு ஊரடங்கு
கொரோனா 2 ஆம் அலை தடுப்பு நடவடிக்கையாக கர்நாடகா மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் நீட்டிக்கப்பட்டு வந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 5 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இந்த நிலையில் ஜூலை 5 ஆம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு தொடர்பான சில முக்கிய அறிவிப்புகள் இன்று (ஜூலை 2) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக முதல்வர் யெடியூரப்பா அவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
தமிழக மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகள் ஒதுக்கீடு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
இதற்கிடையில் மைசூரு உட்பட கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் புதிய பாதிப்புகளின் விகிதம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு உத்தரவு தொடர வாய்ப்புள்ள நிலையில், வார இறுதி ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதற்காக பரிந்துரைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மைசூரு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் கொடுக்கப்படலாம் என தெரிகிறது.
TN Job “FB Group” Join Now
அதே நேரத்தில் விடுதிகள், கிளப்புகள், பள்ளிகள் மற்றும் நீச்சல் குளங்கள் மூடப்பட்டிருக்கும் எனவும், அலுவலகங்கள் இயங்கும் நேரம் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இரவு ஊரடங்கு உத்தரவு இரவு 9 மணி முதல் அமல்படுத்தப்படலாம் என அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது. தவிர மால்கள் மற்றும் திரையரங்குகளில் சில தளர்வுகளை அளிக்கவும், உணவகங்களில் 50% இருக்கைகள், பொது போக்குவரத்து மீண்டுமாக தொடர வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.